உள்ளூர்

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு கடத்தப்பட்ட 558 கிலோ மாட்டிறைச்சியை மடக்கிப்பிடித்தது மாநகரசபை

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 558 கிலோகிராம் மாட்டிறைச்சி மாநகரசபையினரால் நேற்று (04-08) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்தில் சுகாதார சீர்கேடான நிலையில் இந்த இறைச்சி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட இறைச்சி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லப்படும் முன்னரே, பொதுமக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாநகரசபையின் பிரதிமுதல்வரும், சபை உறுப்பினரும் இடையீடு செய்து இறைச்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 558 கிலோகிராம் நிறையுடைய இந்த இறைச்சி, சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் எடைபோடப்பட்டு மாநகரசபையின் களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள்மீதும் தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்