செம்மணி மனித புதைகுழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையிலான அகழ்வுப் பணிகளில், புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இத்துடன், செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது நாளாக தொடரப்பட்டது.
நீதிமன்றம் அனுமதி வழங்கிய 45 நாட்களில், இன்றைய தினம் 39ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதுவரையிலான கட்டப்படியான அகழ்வுப் பணிகள் மொத்தம் 48 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இன்றைய தினம் எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூட்டு தொகுதியுடன், இதுவரை 191 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய மதியத்துடன் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடங்கவுள்ளன.


