உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது.

இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட்டது.

இதையடுத்து 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த வேலைக்காக உணவு விடுதி முன் குவிந்த நிலையில் அதில், பெரும்பாலானோர் இந்திய இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து வலைதளங்களில் , ‘கனடாவில் வேலையின்மை தீவிரமடைந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறதாக என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் படிக்கும் இளைஞர்கள் தங்கள் செலவுக்காக பகுதி நேரமாக உணவு விடுதிகளில் வேலைக்குச் செல்வது வழக்கமான ஒன்று எனினும் பகுதிநேரமாக இளைஞர்கள் வேலைக்குச் செல்வது வழக்கம்தான் என்றாலும், உணவு விடுதி வேலைக்கு இவ்வளவு இளைஞர்கள் குவிவது வழக்கம் இல்லை என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவை சேர்ந்த ஒருவருக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த ஆய்வாளரான ஹின்டோன் இம்முறை நோபல் பரிசு வென்றார். இயந்திர கற்கை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விடயங்களை இயற்பியல் ஊடாக ஆய்வுக்கு உட்படுத்தியமை