உள்ளூர்

கனடாவில் வசிக்கும் நம்மவரின் யாழ்ப்பாண சொத்தை ஆட்டைய போட்டவர்களை அள்ளியது யாழ் பொலிஸ் குழு

Jaffna Police

கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள அவரது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார்.

சந்தேக நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி வேறு சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் பாதிக்கப்பட்டவரான கனடாவை சேர்ந்த நபர் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும்; நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை பிணையில் நீதிமன்று அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்