உள்ளூர் வணிகம்

யாழ் வணிகர் கழக ஆண்களுக்கு பெண்கள் வகுப்பெடுத்தார்கள்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உறுப்பினர்களுடன் நேற்று; கலந்துரையாடினர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகியோரே யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் உட்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

தேர்தலில் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது.
இதில் கட்சி ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன், முன்னாள் போராளிகள், யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழு இன்று (03) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளது.   ஜனாதிபதி செயலகத்தில் இந்த
வணிகம்

பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராகப் பேராசிரியர் ஹரேந்திர திசாபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் கூட்டக நிறுவன ஆளுகையின் பேராசிரியரான