உலகம்

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவராக வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க ஹமாஸ் அமைப்பு பரிசீலித்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் நீடித்துக் கொண்டிருக்கிறது.

 

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் நீடித்துக் கொண்டிருக்கிறது.இதில் 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே ஹமாஸ் தலைவர் யாஹியாசின் வாரை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின்பு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாஹியா சின்வாரும் கொல்லப்பட்டார்
யாஹியா சின்வார் உயிரிழந்ததை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்தது.
இதையடுத்து இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.
இந்த நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியேறாதவரை பிணைக்கைதிகளை விடுவிக்க போவதில்லையென ஹமாஸ் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஹமாஸ் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா கூறும்போது, காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.
இஸ்ரேல் படைகள் திரும்பப்பெற வேண்டும்.
சிறையில் உள்ள தமது அமைப்பினர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவராக காசாவுக்கு வெளியே வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க அந்த அமைப்பு பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் தாக்குதலில் 33 பேர் பலியானார்கள். 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்