உள்ளூர்

அரசாங்கம் மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது- பிரதமர்

புவக்பிட்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி மக்களால் தீர்மானிக்கப்படும்.

இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் தேவையான மாற்றங்களை முறையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதியாகச் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மக்களிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை மூலம் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

தங்களிடம் நிறைவேற்று அதிகாரம் மாத்திரமே உள்ளது, அதனைக் கொண்டு உலகின் மிகச் சிறிய அமைச்சரவையை தாம் கொண்டு நடத்துகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தைச் சுத்தப்படுத்தி ஜனநாயக சக்தியாக மாற்றுவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முதலாவது நடவடிக்கை எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்