உள்ளூர்

ஊழல் பேர்வழியான ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அநுர அரசு நியமித்துள்ளது- ஈபிடிபி.

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பல்வேறு ஊழல் மோசடிளில் ஈடுபட்ட ஒருவரை நியமித்தமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இவ்வாறு ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்
யாழ் ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழித்து மாற்றத்தை கொண்டுவருவதாக கூறியே ஆட்சியை கைப்பற்றினார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்; பல கோடி ஊழல் மோசடிகளை செய்தவர் என குற்றம் சுமத்தப்படுகின்றது

மோசடி மிக்க நபரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமித்தமையானது ஜனாதிபதி அனுரவின் கருத்தை அல்லது அவரது நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்