உள்ளூர்

எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகள்.

பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே இதனை தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து கருத்துரைத்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பிரசார நடவடிக்கைகளுக்காக இன்னும் 4 நாட்கள் மாத்திரமே உள்ளதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது.

அந்தவகையில், 11ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அமைதி காலம் தொடங்குகிறது.
அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக் கூடாது.

மேலும் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்கு கேட்க முடியாது.
வீடு வீடாகச் செல்ல முடியாது என அனைத்து வேட்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் அது சட்டவிரோத செயலாகும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/srilanka

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்