உள்ளூர்

கிளிநொச்சி இரணைமடுக்குள மீள் கட்டுமான வேலையில் ஊழல்-விசாயிகள் கவலை

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் கட்டாத காரணத்தால் இன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படவில்லையென விவசாயிகள் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் தற்போது அது இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த நிலையில் முரசுமோட்டை ஊரியான் பன்னங்கண்டி மற்றும் கோரக்கண் கட்டு ஊரியான் மேற்கு ஆகிய பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் சுவர்களில் தற்போது வெடிப்பு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது

இது தொடர்பாக விவசாயிகள் பல தடவை சுட்டி காட்டிய போதும் துறைசார் அதிகாரிகள் அசம்பந்தப் போக்கை காட்டி வருவதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஓப்பந்த காரருக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஊழலே இதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்