உள்ளூர்

எனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும்- பா.உ.அர்ச்சுனா இராமநாதன்.

நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது தான் நடந்துநடந்துகொண்ட விதத்திற்கு எதிர்ப்பு வெளியாகியுள்ளதால் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான செயலமர்வில் கலந்துகொண்டவேளை தான் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான சம்பவத்தினால்,என்னால் வீதியில் நடக்ககூட முடியாத நிலை காணப்படுகின்றது, ஊடகங்கள் 45 ஐம்பது நிமிடங்கள் என்னை பேட்டி கண்டன, அவர்கள் நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவனா என கேள்வி எழுப்பினார்கள் நான் இல்லை என பதிலளித்தேன் என அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

எனினும் இரண்டாவது கேள்விக்கான எனது பதிலை அவர்கள் வேண்டுமென்றே தவிர்த்துக்கொண்டு;ள்ளனர் இதனால் வீதியில் இறங்க முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் எனக்கு வழங்கப்படும் பாதுகாப்பை நாடாளுமன்ற அதிகாரிகள் எப்போது வழங்குவார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

https://www.facebook.com/profile.php?id=100091900877215

https://graphicsland.lk/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்