உள்ளூர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிறப்பித்த உத்தரவு!

மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதையும் படியுங்கள்> நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை!

அத்துடன் 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தற்போது சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இதன்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

https://www.facebook.com/Athavannews

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்