உலகம்

தாய்லாந்து இசை விழாவில் குண்டு வெடிப்பு 3 பேர் பலி 50 பேர் காயம்

தாய்லாந்தின் வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் நள்ளிரவில் இசை திருவிழா நடந்தது.

இதில் சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு திடீரென்று குண்டு வெடித்தது.
இதனால் திருவிழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள்.

50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்த பகுதி மியான்மர் எல்லைக்கு அருகே உள்ளது.
ஆங்கு கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கே.என்.யூ என்ற கிளர்ச்சிக் குழுவினர் தங்களது எதிரிகும்பலுடன்’ மோதலில் ஈடுபட்டதாகவும், அப்போது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை அந்த கிளர்ச்சி குழு மறுத்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சரின் செய்தித்தொடர்பாளர் தனதிப் சவாங்சாங் கூறும்போது, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு இரு குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது.

அந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டவைகள் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்