உள்ளூர்

ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் வெளிவந்த தகவல்!

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு கவிழ்ந்த தனியார் பேரூந்து  நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விபத்தில் பேருந்தின் சாரதியின் கதவு பூட்டு இயங்காமையும் திடீரென கதவு திறந்த போது இருக்கையிலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் பொறுப்பதிகாரியின் பெறுப்பில் இருந்த பேரூந்தை பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் பார்வையிட்டார்.

மேலும், ஓட்டுனர் பாதுகாப்பு பட் அணியாததுடன், பல இரும்பு சாதனங்கள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்ததால், விபத்து காரணமாக பயணிகள் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்திருந்தனர்
மேலும், பேருந்தின் இருக்கைகள் தரமான முறையில் பொருத்தப்படாததால், அனைத்து இருக்கைகளும் கழன்று விழுந்து ஒன்றுடன் ஒன்று மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக மோட்டார் பரிசோதகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் எந்தவிதமான உபகரணங்களையும் பொருத்த அனுமதிக்க வேண்டாம் என்றும், பொருத்தப்பட்ட உபகரணங்களை அகற்றுமாறும் தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் போக்குவரத்து பொலிஸ்ஸாடிடம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் தகுதியற்ற பேரூந்தை பயன்படித்தியமை தொடர்பில் பேரூந்தின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இதையும் படியுங்கள்> மீண்டும் முல்லைத்தீவுக்கு அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்!

https://www.youtube.com/shorts/Dk9sseqIS34?feature=share

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்