இந்தியா

டெல்லியில் காய்கறி சந்தைக்கு சென்று விலைவாசி குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

டெல்லி மரக்கறி சந்தையில் விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்துக் கொண்டார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.

அதன்படி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்தார்.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள கிரி நகர் காய்கறி சந்தைக்கு சென்ற ராகுல் காந்தி விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இது தொடர்பான காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ‘ஒருகாலத்தில் 40 ரூபாயாக இருந்த பூண்டின் விலை தற்போது 400 ரூபாயாக மாறி விட்டது.

அதிகரித்து வரும் பணவீக்கம் சாமானிய மக்களின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்>மஹிந்தவுக்கும், நாமலுக்கும் உயிரச்சுறுத்தல்?

https://www.youtube.com/@pathivunews/shorts

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என