உள்ளூர்

யாழ் மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வேலணை, கோப்பாய், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் மருதங்கேணி ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைக்கு அமைய,

பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாவட்ட ரீதியில் அனுமதிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட காணிப் பயன்பாட்டு உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்>மக்கள் தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் – வடக்கு ஆளுநர்!

https://www.youtube.com/shorts/J883sWhhyio?feature=share

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்