இந்தியா

இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்குமாறு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை!

டெல்லி மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் தனித்து பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

நேற்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளரான அஜய் மக்கான் டெல்லி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, மாநகராட்சி வசதிகள், காற்றுமாசு ஆகியவை தொடர்பாக ஆம் ஆதமி, பா.ஜ.க.-வுக்கு எதிராக 12 குறிப்புகள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.


இது ஆம் ஆத்மி கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அஜய் மக்கானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்க மற்ற கட்சிகளிடம் கேட்க இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி மாநில முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் .சஞ்சய் சிங் ஆகியோர், டெல்லி தேர்தலில் பாஜக-வுக்கு காங்கிரஸ உதவி செய்து கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

சஞ்சய் சிங் கூறுகையில் ‘டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதாயம் அடைய காங்கிரஸ் கட்சி எல்லாவைற்றையும் செய்து கொண்டிருக்கிறது.


அஜய் மக்கான் பாஜக எழுதி கொடுத்ததை வாசிக்கின்றார்
பாஜக-வின் உத்தரவின் பேரில் அறிக்கைகளை வெளியிடுகிறார், பாஜக-வின் அறிவுறுத்தலின் பேரில் ஆம் ஆத்மி தலைவர்களை குறிவைக்கிறார்.

நேற்று அனைத்து எல்லையையும் மீறிவிட்டார்.

எங்களது தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தேசவிரோதி என அழைத்துள்ளார்.
காங்கிரஸ் அல்லது அஜய் மக்கான் டெல்லியின் எந்த பா.ஜ.க தலைவரையும் தேசவிரோதி என அழைக்கவில்லை’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதையும் படியுங்கள்>அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார் – திருமாவளவன்

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என