கனடா

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள கனேடிய பொலிஸார்!

ரொறன்ரோ நகரில் பெண்ணொருவர் வீட்டை உடைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்

பலவந்தமாக வீட்டுக்குள் பிரவேசித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவருக்கு உயிர் ஆபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் ஒளிப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை கைது செய்வதற்கான தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

5 அடி 6 அங்குலம் உயரத்தைக் கொண்ட குறித்த பெண் குறித்த தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொலிசாருக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

43 வயதான மேகன் கூடே என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த பெண்ணுக்கும் சம்பவத்தில் காயம் அடைந்தவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதையும் படியுங்கள்>அரச அதிகாரிகளோட போராட வேண்டியுள்ளது அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கவலை

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கனடா

பழங்குடியின சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி.

ஒன்றாரியோ பழங்குடியின சமூக மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்திற்காக
உலகம் கனடா

கனடாவிற்கு வருகின்றவர்களை பாதுகாக்கும் புதிய வட்டம் அறிமுகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனையும் மோசடிகளில் இருந்து தப்புவதற்கும் சிக்குவதனை