இந்தியா

ஏகலைவன் போல் இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது பா.ஜ.க: ராகுல் காந்தி

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது

பா.ஜ.க. ஏகலைவனைப் போல் இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது.

அரசு பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படுவதில்லை. அவ்வாறு வெளியிடப்பட்டாலும் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படுவதில்லை.

தேர்வுகள் நடத்தப்பட்டால் வினாத்தாள்கள் கசிந்துவிடுகின்றன. இளைஞர்கள் நீதி கோரும்போது அவர்களின் குரல் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது.

உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் சமீபத்திய போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய பிரதேசத்தில் அரசு தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக போராடிய 2 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுவும் முதல் மந்திரியே அந்த மாணவர்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்த பிறகும் இது நடந்துள்ளது.

பா.ஜ.க. அரசு மாணவர்களின் நம்பிக்கையை உடைத்து, ஜனநாயக அமைப்பை முடக்கிவிட்டது.

மாணவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்.

எந்த நிலையிலும் இளைஞர்களின் குரலை பா.ஜ.க. நசுக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

{{CODE2}}

இதையும் படியுங்கள்>ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உலகின் மிக வயதான வீராங்கனை காலமானார்!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என