உள்ளூர்

சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேகநபர்கள் கைது !

பழங்காலப் பொருட்களை திரட்டும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு மேற்கொண்ட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அட்டுலுகம மற்றும் மீவலகந்த பகுதிகளில் நடைபெற்ற அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

அதில், 25 முதல் 56 வயதிற்கு இடையிலான சீதுவ மற்றும் தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில், பூஜை பொருட்கள் மற்றும் அகழ்வு பணியில் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்>தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்