உள்ளூர்

‘யாழ்ப்பாணம் – சுகாதார நகர திட்டத்தின்’ முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு!

‘யாழ்ப்பாணம் – சுகாதார நகர திட்டத்தின்’ முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நேற்று திங்கட்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட விடயப் பரப்புக்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களின் பாவனையை மட்டுப்படுத்துவதன் தேவைப்பாடு ஆராயப்பட்டதுடன் யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள சில வீதிகளை ஒருவழிப்பாதையாக்குவதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஊடாக குழு அமைத்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

மேலும் யாழ். நகர மத்தியில் அமைந்துள்ள பேருந்துத் தரிப்பிடத்தின் ஊடாக எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் பல தரப்புக்களும் சுட்டிக்காட்டினர்.

பேருந்துத் தரிப்பிடத்தை இடமாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர் இது தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையினருடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

திண்மகக் கழிவகற்றல் முக்கிய சவாலாக இருக்கின்றமை தொடர்பில் ஆராயப்பட்டது.

எரியூட்டி அமைப்பது தொடர்பில் திட்டம் முன்மொழியப்பட்டாலும் அதற்கான நிதி மூலம் மற்றும் பொருத்தமான இடத்தைக் கண்டறிவது தொடர்பில் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.

யாழ். நகரப் பகுதியிலுள்ள பூங்காக்களை மேம்படுத்துவது மற்றும் நீச்சல் தடாகத்துக்கு பொருத்தமான இடத்தைக் கண்டறிவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டு அடுத்த மாதம் மீண்டும் கலந்துரையாடல் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்>யாழில் தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய கும்பல்.!!!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்