முக்கிய செய்திகள்

தமிழ் இளையோருக்கு தலைமத்துவம் பற்றி தெரியாது என ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்

வடக்கிலும் கிழக்கிலும் தலைமைத்துவம் என்றால் என்ன பண்பு, பண்பாடு என்றால் என்ன பக்குவம் என்றால் என்ன என்று தெரியாத நிலையில் இன்றைய தலைமுறையினர் வாழ்வதாக ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்

இதனால் பல துன்பங்களை துயரங்களை அனுபவித்து வருகின்றோம் என சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

அன்னை, சிவத் தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டி ஜனனதினம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அன்னபூரணி மண்டபத்தில் அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அன்னையின் நிழலில் வாழுகின்ற பிள்ளைகள் கல்வி கற்பித்து பட்டதாரிகளாக்கி ஆலயச் சூழலில் வீடுகளை கட்டி வழங்கியுள்ளோம்.

அன்னையின் தீர்க்க தரிசனத்தால் கோவில்கள் சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றது
அன்னையின் பெயரில் பல நிதியங்களை உருவாக்கி வைத்தியசாலைகள், பாடசாலைகள் உதவிகள் செய்து வருவதோடு பசியோடு வருபவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றது.

பல சத்திரங்கள் மடங்கள் இருந்த நிலையில் இன்று அவை கொத்துரொட்டிக் கடைகளாக மாறியுள்ளது

பல மடங்கள் குறிப்பாக அன்னை சத்திர மடம் கடையம்மா மடம் கந்தர் மடம் இன்று இல்லாது போயுள்ளது என ஆறுதிருமுருகன் மேலும் தெரிவித்துள்ளாhர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல