ஈழத்து சினிமா நினைவஞ்சலி விளம்பரம்

4ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள்!!

ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் ந.கேசவராஜ் அவர்களது 4ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

பிறப்பு (19 ஐப்பசி 1962 ) இறப்பு( 9 தை 2021)

நவரட்ணம் கேசவராஜ் ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார்.

 

அது மட்டுமல்லாது இவர் விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியுடன் இணைந்து பல குறும்படங்களையும், முழுநீளத் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

ஈழப்போர்க் காலத்தில் அப்பகுதிகளில் உள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை திரைப்படத் துறைசார்ந்து வளர்த்துவிட்டவர்.

‘கடலோரக் காற்று’, ‘அம்மா நலமா’ உட்பட 6 முழுநீளத் திரைப்படங்கள், 5 குறுந்திரைப்படங்கள், 10க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கி உள்ளார்.

யாழ் அரியாலை மண்ணிலே ஆரம்பமான அவரது ஈழ சினிமா மீதான காதல் யாழ் மண்ணிலேயே நிறைவடைந்தது.

தாயக விடியலுக்காய் இறுதிவரை உழைத்து உங்கள் வாழ்வைக் கலைப்பணிக்காய் அர்பணித்து ஓயாது உழைத்தீர்கள்.. உங்கள் கனவுகள் மெய்ப்படும் நின்மதியாய் உறங்குங்கள்.

                                                                                             தகவல்- குடும்பத்தினர்.

https://graphicsland.lk/?p=526

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஈழத்து சினிமா

தம்பி மதிசுதாவின் மற்றொரு சாதனை. அவரின் முகநூலில் இருந்து

Our film “Dark days of heaven” /’வெந்து தணிந்தது காடு’ got the special mention award in “Chennai world film festival” எனது
ஈழத்து சினிமா

உலக தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதை பெற்ற ‘பொய்யாவிளக்கு’ டொரோண்டோவில் திரையிடப்பட்டது

எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாத அளவில் உண்மையின் நிழலை படமாக்கியிருக்கின்றார்கள் முள்ளிவாய்க்காலில் பற்றிப் படர்ந்த தீயாக இதயத்தைச் சுட்டெரிப்பதாக நேற்று பார்த்த ஒருவரின் கண்களில்