முக்கிய செய்திகள்

முஸ்லீம் மாணவி கடத்தப்பட்ட போது காப்பாற்ற முனைந்த இளைஞர் காயம் –

கண்டி தவுலாஹல பகுதியில் கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இந்த இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில்,

‘நான் அந்த வாகனத்துக்குள் ஓரளவு ஏறிவிட்டேன். அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன்.

வாகனத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள். என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர்.

நான் வீதியில் விழுந்தேன். அவ்வேளை தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டன’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை மாலை மாணவியொருவர் கடத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவியை காப்பாற்ற முயன்றமைக்காக இளைஞனை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.

ஹந்தெச பகுதியில் விடுதியொன்றில் தங்கி கல்வி கற்றுவந்த மாணவி தனது நண்பிகளுடன் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த வேளையே கடத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியை கடத்தியவர் மாணவியின் தந்தை வழி உறவினர் என தெரிவித்துள்ள பொலிஸார் திருமண விவகாரமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

வாகன சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல