முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் விபத்து  சாரதி பலி 19 ரஸ்சியர்கள் காயம்

தெற்கு அதிவேக வீதியில் இன்று (17-01-2025) காலை ரஸ்சிய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் சொகுசு பேரூந்து சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியுடன்; மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் பஸ் சாரதி உயிரிழந்துள்ள அதே வேளை சுமார் 19 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

தங்காலை நோக்கிச் செல்லும் வீதியில் 138 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் அதிவேகமாக பயணித்த பேரூந்து பாரவூர்தியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது சுமார் 30 ரஸ்சிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சொகுசு பேரூந்தில் பயணித்துள்ளனர்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல