கனேடா பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்
அதனை தொடர்ந்து புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்ட்டுள்ளது
இந்நிலையில் தேர்தலில் இருந்து சில முக்கிய வேட்பாளர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கிறிஸ்டியா ஃப்ரீ லேண்ட், கரீனா கோல்ட் மற்றும் மார்கெனரி ஆகியோர் கட்சி தலைமை பொறுப்பிற்கு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்ற போதிலும் உத்தியோகப்பூர்வமாக அவர்கள் இன்னமும் அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சில சிரேஸ்ட அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் கட்சித் தலைவர் பதவிக்காக போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமான ஒரு பிரசாரத்தை செய்வதற்கு கால அவகாசம் போதுமானதாக இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கைத்தொழில் அமைச்சர் சாம்பெனும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

