முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம் பகுதியில் வெள்ளத்தினால் விவசாயிகள் பாதிப்பு

இந்நிலையில் அப்பகுதி கமக்கார அமைப்புக்களின் அழைப்பையேற்று அழிவடைந்த விவசாய நிலங்களை வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அந்தவகையில் உடையார்கட்டு கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, உடையார்கட்டுக் குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட 1800 ஏக்கர் நெற்பயிற்செய்கையில் பெருமளவான வயல் நிலங்கள் அறுவடைக்காகத் தயாராக இருந்தநிலையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வள்ளிபுனம் இடைக்கட்டுக் குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்ட 175ஏக்கர் பெரும்போக நெற்செய்கை மற்றும், தேவிபுரம் (அ)பகுதி காளிகோவில் வெளியில் செய்கைபண்ணப்பட்ட 66ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைகளில் பெருமளவான வயல்நிலங்களும் அறுவடைக்குத் தயாரானநிலையில் வெள்ள அனர்த்தத்தால் அழிவடைந்துள்ளன.

இதனால் அப்பகுதி விவசாயிகள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந் நிலையில் தமது பாதிப்பு நிலைதொடர்பில் இதுவரையில் உரிய தரப்பினர்கள் எவரும் வருகைதந்து பார்வையிடவில்லை என விவசாயிகளால் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டதுடன், வெள்ள அழிவிற்கான நிவாரணங்களைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந் நிலையில் விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பிலான கோரிக்கைக்கடிதங்களைத் தம்மிடம் கையளிக்குமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டதுடன், உரியதரப்பினருடன் பேசி விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல