குருநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய சிறியளவிளான சூறாவளி காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த கட்டிடங்களையும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் , உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
