மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாலத்தோப்பூர் பகுதியில், அம்பியூலன்ஸ் வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
அம்பியூலன்ஸ் அருகில் உள்ள வாய்க்காலினுள் வீழ்ந்துள்ள அதே வேளை அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து இனறு; (21) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
