முக்கிய செய்திகள்

நாடு முழுவதிலும் 55 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் தொடா மழையினால் பெரிய மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 55 நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதோடு, 60 க்கும் மேற்பட்ட குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றமை குறிப்பிடத்தக்கது.
பின்வரும் ஏனைய மாவட்டங்களில் குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்து காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம்: 9 குளங்களில் 8 குளங்கள்

பதுளை மாவட்டம்: 7 குளங்களில் 4 குளங்கள்

மட்டக்களப்பு மாவட்டம்: 4 குளங்களில் 3 குளங்கள்

அம்பாந்தோட்டை மாவட்டம்: 10 குளங்களில் 4 குளங்கள்

காலி மாவட்டம்: 2 குளங்களில் 1 குளம்

கண்டி மாவட்டம்: 3 குளங்களில் 2 குளங்கள்

குருணாகல் மாவட்டம்: 10 குளங்களில் 9 குளங்கள்

மொனராகலை மாவட்டம்: 3 குளங்களில் 2 குளங்கள்

திருகோணமலை மாவட்டம்: 5 குளங்களில் 4 குளங்கள்

மன்னார் மாவட்டம்: 4 குளங்களில் 2 குளங்கள்

இந்த குளங்களில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தாழ்நில பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல