முக்கிய செய்திகள்

தரம் 5ற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 319,284 பரீட்சார்த்திகளில் 51,244 மாணவர்களே சித்தி- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிகூடிய மதிப்பெண்களை பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (24) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

நேற்று வெளியான பெறுபேறுகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவர் 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

அதேநேரம், பல பரீட்சார்த்திகள் 187, 186 மற்றும் பல அதிகபடியான மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.

இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் ஆவர்.

2024 ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05 ஆகும்.

2023 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12மூ பேர் சித்தியடைந்திருந்தனர்.

மேலும் இந்த ஆண்டு முடிவுகளின்படி, 77.96மூ மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இது சற்று அதிகமாகும்.

2023 ஆம் ஆண்டில், 77.75மூ மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

மேலும், தேர்வெழுதிய மாணவர்களில் 37.70மூ பேர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

எனினும் 2023 உடன் ஒப்பிடும்போது ,து குறிப்பிடத்தக்க குறைவு.

கடந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் 45.06மூ பேர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல