யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தின் தயாரிப்பு மற்றும் ஒளிப்படமாக்கலில் உருவான டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ஆவணக் குறும்படம் கடந்த திங்கட்கிழமை (20) வெளியிடப்பட்டது.
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கnண்டார்
இந்த நிகழ்வில் படத் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பில் ஈடுபட்ட இந்துக் கல்லூரி ஒளிப்பட கழக மாணவர்களுக்கு பிரதம விருந்தினர் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார்.
அத்துடன் இந்துக் கல்லூரி ஒளிப்படக் கழகத்துக்கான கேடயமும் பிரதம விருந்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த ஆவணப்படத்தில் பங்குபற்றிய சுகாதாரத்துறை பணியாளர்கள் ஏனைய விருந்தினர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த டெங்கு ஆவண குறும்படத்துக்காக முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் த.தவரூபன் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
