முக்கிய செய்திகள்

பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் செய்யவுள்ள நிலையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டனர்

இந்நிலையில் நேற்றுபுதன்கிழமைஇ நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்இ வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன்இ போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன்இ தற்காலிக சுகாதார உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் எஸ்.ஜெஸ்மின் ஆகிய ஐவரின் பெயரை குறிப்பிட்டு இ நாளைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போராட்டங்களை நடாத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் மன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணைக்காக பெயர் குறிப்பிட்ட ஐந்து நபர்களையும் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று அழைப்பு கட்டளை நேற்றைய தினம் விடுத்திருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளைஇ அழைப்பு கட்டளை வழங்கப்பட்ட நபர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

அதில் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவரின் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இ வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கையை முன் வைத்து இ ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக அமைதியான வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

அமைதியான முறையில் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்காதுஇ எமது கோரிக்கையை முன் வைத்து போராடவுள்னர் அதற்கு மன்று அனுமதி வழங்க வேண்டும் என மன்றை கோரினார்

சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை அடுத்துஇ உயர் பாதுகாப்பு வலயமாக கட்டமைக்கப்படும் பகுதிக்குள் செல்லாது இ ஜனாதிபதி வரும் பாதையில் இ வீதிக்கு குறுக்காக செல்லாது இ வீதியின் ஓரமாக கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுக்க மன்று அனுமதித்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல