முக்கிய செய்திகள்

சிறைசாலை கைதிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு விசேட அனுமதி – சிறைச்சாலை ஆணையாளர்

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை காண உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளை ; 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட உள்ளது.

அதற்கமைய உரிய பாதுகாப்புகளுடன் திறந்த முறையில் சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாகவே கைதிகளை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைதிகளை பார்வையிட வரும் உறவினர்கள் உணவு, இனிப்பு மற்றும் சுகாதார பொருட்கள் ஆகியவற்றை ஒருவருக்கு தகுந்த அளவில் மாத்திரம் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து சிறைச்சாலைகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார விதி முறைகளுக்கமைய கைதிகளை காண்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல