முக்கிய செய்திகள்

மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம் – பிரதி அமைச்சர சுசில் ரணசிங்க

மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளை விவசாயிகளின் நலனுக்காக சில வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விவசாயத்தை துரிதமாக முன்னேயேற்றக்கூடிய ஒரு நிறுவனமாக மகாவலி அதிகார சபையை குறிப்பிடலாம் எனவும் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 40மூ மகாவலிக்கு சொந்தமானது எனவும், அதில் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் நிலப்பரப்பில் மீன்டும் விவசாயத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மகாவலி மறுமலர்ச்சி வாரத்தை முன்னிட்டு குண்டசாலை, திகன, விக்டோரியா மற்றும் கொத்மலை’ ஈ ‘வலயங்களில் வதிவிட வர்த்தக முகாமையாளர் அலுவலகம் கடந்த திங்கட்கிழமை (3) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல