முக்கிய செய்திகள்

ஜனாதிபதி முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கும் இடையில் பரஸ்பர முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உத்தேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களுடைய முதலீடுகளுக்கு நேயம்மிக்க நிறுவனச் சூழலை உறுதிப்படுத்துவதன் மூலம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக சட்டரீதியான பொறிமுறையை உருவாக்குவதற்காக இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கும் இடையில் பரஸ்பர முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இருதரப்பினரும் உடன்பாடுகளை எட்டியுள்ளனர்.

உத்தேச ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதன் மூலம் ஐக்கிய அரபு எமிர் குடியரசின் இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், முதலீடுகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு இயலுமை கிட்டியுள்ளது.

இருதரப்பினருக்கிடையில் கையொப்பமிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கிணங்க, 2025 உலக நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல