இந்தியா

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியதாக உ.பி. அரசு தகவல்

மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளா தொடங்கியபோது சுமார் 40 கோடி மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை 45 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மகர் சங்கிராந்தி, மவுனி அமாவாசை, பசந்த் பஞ்சமி நாட்களில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர் வருகை தந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையான இன்று காலை 10 மணி வரை 74.96 லட்சம் மக்கள் புனித நீராடியுள்ளனர். மவுனி அமாவாசை தினத்தன்று 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
மகர் சங்கிராந்தி நாளில் 3.35 கோடி பக்தர்களும், பசந்த் பஞ்சமி நாளில் 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடியுள்ளனர்.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஸா உள்ளிட்டோர் புனித நீராடியுள்ளனர்.
வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் பிரயாக்ராஜியில் புனித நீராடியுள்ளனர்.

அதேபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரும் புனித நீராடியுள்ளனர்.

மவுனி அமாவாசை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந்தேதி அதிகாலையில் ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம்.
இதை உத்தர பிரதேச அரசு மறைக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என