இந்தியா முக்கிய செய்திகள்

அதானி குழுமத்துடன் இலங்கை செய்துகொண்ட 440 மில்லியன் டொலர் ஒப்பந்தம் ரத்து

அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்தது.

மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்துடன் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 440 மில்லியன் டொலர் அளவிலான ஒப்பந்தம் போட்டது.

ஆனால் சந்தை விலையைவிட 70 சதவீதம் அதிக விலைக்கு வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்வதாக, அனுர குமார திசா நாயக தலைமையிலான இலங்கை அரசு கடந்த மாதம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘இலங்கையின் சுநு காற்றாலை மின்சார திட்டம் மற்றும் இரண்டு மின் பரிமாற்ற திட்டங்கள் ஆகிவற்றில் இருந்து விலகுகிறோம் என்ற முடிவை உயர்மட்ட குழுவால் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசு விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்பிற்காக தயாராக இருக்கிறோம் என்பதில் தொடர்ந்து உறுதி பூண்டுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளது.

அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்திற்கு மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என