இந்தியா முக்கிய செய்திகள்

நாளை காதலர் தினத்தையொட்டி தமிழகத்தின் கோயம்பேட்டில் விதவிதமான ரோஜா பூக்கள் விற்பனைக்கு தயார்

காதலர் தினம் நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சோக்லெட் உள்ளிட்ட விதவிதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வது வழக்கம்.
இதனால் பூ விற்பனை கடைகளில் வழக்கத்தைவிட விற்பனை அதிகமாக இருக்கும்.
காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஓசூர், பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிகப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் விதவிதமாக அதிக அளவில் விற்பனைக்கு குவிந்து உள்ளது.
இதில் 20 எண்ணிக்கை கொண்ட (ஒரு பஞ்ச்) சிவப்பு ரோஜா- இந்திய ரூபாவில் 450-க்கும், பேபி பிங்க், ஜூமாலியா, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்கள் வகைகள் இந்திய ரூபாவில் ஒரு பஞ்ச்-ரூ.350-க்கும் விற்பனை ஆகிறது.
வெளி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் இதன் விலை 2 மடங்கு வரை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான வகைகளில் பூக்கள் வந்து குவிந்து உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு புதிய பஸ்நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதால் புறநகர் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
இதனால் பூக்கள் விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என