முக்கிய செய்திகள்

கனடா செல்ல முயன்ற யாழ் தம்பதியினர் கட்டுநாயக்காவில் கைது

போலியான கனடா விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குச் செல்ல முயன்ற ஒரு தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள் எனவும் கணவனுக்கு 40 வயது எனவும் மனைவிக்கு 34 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் நரிட்டாவிற்கு நேற்று திங்கட்கிழமை (17-02-2025) இரவு 8.35 மணிக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ருடு-454 என்ற விமானத்தில் ல் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனா்.

இதன்போது, அவர்கள் விமான அனுமதிக்காக சமர்ப்பித்த ஆவணங்களில் போலியான கனடா விசாக்கள் இருந்ததாக சந்தேகித்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைக்க நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல