முக்கிய செய்திகள்

ஆணொருவரும் பெண்னொருவரும் சட்டத்தரணிகள் போல வேடமணிந்து நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் நீதிமன்றத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் இன்று   இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சட்டத்தரணி வேடத்தில் பெண்ணொருவரும் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரிவந்துள்ளன.

அதன்படி, துப்பாக்கிதாரி சட்டத்தரணி வேடத்தில் வெறும் கையில் நீதிமன்றத்துக்குள் முதலில் சென்றுள்ளதாகவும், பின்னர் குறித்த பெண் புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்து சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் சென்று துப்பாக்கிதாரியிடம் துப்பாக்கியை கொடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல