முக்கிய செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ தப்புவதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நந்துன சிந்தக என்பவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்த சம்பவம் தொடர்பில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று புதன்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதேவேளைஇ பொலிஸ் கான்ஸ்டபிளுடன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இந்தியாவிலிருந்து இன்றைய தினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும்இ சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல