முக்கிய செய்திகள்

யாழ் இணுவில் பகுதியில் தாயின் முன்னிலையில் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல் தலைமறைவு பொலிஸார் அசமந்தம்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி ,தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துள்ளார்.

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் காணொளியாகவும் மற்றும் புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கோப்பாய் காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் , நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 பேர் வரையில் காவல்துறையினர் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் இதுவரை முன்னெடுக்கவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல