உள்ளூர் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ’ கொலைசெய்யப்பட போகின்றார் என்ற விடயம் உளவுத்துறைக்கு தெரிந்தும்; தடுக்கத் தவறியது ஏன்? ரோஹண பண்டார எம்பி

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும் இதைத் தடுக்கத் தவறியதால் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதிமன்ற அறைக்குள் துப்பாக்கிதாரியை கடத்த உதவிய பெண் குறித்து உளவுத்துறை முன்கூட்டியே தகவல்களைச் சேகரித்ததாகவும் கூறினார்.

‘சிங்கபுர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற இந்தப் பெண் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக உளவுத்துறை முன்னதாகத் தகவல் அளித்திருந்தது.

ஆனால் இந்த தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் ஏதாவது செய்ய முடிந்ததா?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்,
இந்த சம்பவத்தை 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

துப்பாக்கிதாரி சில மணி நேரங்களுக்குள் பிடிபட்டதாகக் கூறினாலும், குற்றத்திற்கு உதவிய பெண் தப்பி ஓடிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
சந்தேக நபரின் கைது நடவடிக்கையை அதிகாரிகள் கையாண்ட விதத்தையும் அவர் கண்டித்தார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்