இந்தியா ஜோதிடம்

உயிரின் ஓசையே ஓம் என ஆன்மீகத்தின் மீது அதிக பற்றுள்ளவர்கள் நம்புகிறார்கள். நீங்கள் எப்படி?

கருப்பையில் இருக்கும் குழந்தை ‘ஓம்’ வடிவில்தான் உள்ளது என்பதே, ‘ஓம்’ என்ற மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்..

தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று உள்ளது. ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் அதில் இருக்கும். அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே இருக்கிறது.

இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் உயிர் போய்விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்.

நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம்.

நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை.

ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு. கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்புளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.

தொப்புளில் ‘ஓ’ என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்குகிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு.

இப்படி உயிராகிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெடுத்து மேலெழும்பி வருவதே ‘ஓம்’ எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படுவதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஜோதிடம்

இந்த வாரத்தின் முக்கியமான நாட்கள் விசேஷங்கள் (8.10.2024 தொடக்கம் 14.10.2024 வரை)

10-ந்தேதி துர்க்காஷ்டமி. 12-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா. 3-ந்தேதி (செவ்வாய்) சஷ்டி விரதம். திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம். கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள்
ஜோதிடம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 09-10-2024

இன்றைய பஞ்சாங்கம் குரோதி ஆண்டு புரட்டாசி-23 (புதன்கிழமை) பிறை: வளர்பிறை திதி: சஸ்டி காலை 8.20 மணி வரை பிறகு சப்தமி நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 2.06