உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவுக்கு வாருங்கோ நல்ல காற்றை சுவாசியுங்கோ

நாட்டில் வவுனியாவில் மட்டும் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

நாட்டில் நேற்று (24-02-2025) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், வவுனியாவில் மட்டும் நல்ல நிலையிலும் காணப்பட்டது.

இன்று காற்றின் தரம் 40 தொடக்கம் 78க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மிதமான நிலையிலும், வவுனியாவில் நல்ல நிலையிலும் இருக்கும் என்பதை குறிக்கின்றது.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானதாக இருக்கும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்