உள்ளூர் முக்கிய செய்திகள்

2024 ல் சமூக ஊடகங்கள் மூலமாக 17 ஆயிரம் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவித்துள்ளது

கடந்த வருடம் 17,000 சமூக ஊடகங்கள் மூலமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (ளுடுஊநுசுவு) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை சேர்ட் நிறுவனத்தின் பொறியியலாளர் சாருக்க தமுனுபொல,

வயது வந்தவர்களுக்கு நிகழ்நிலை மூலம் 1,371 பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிறுவர் பாலியல் வன்முறை சம்பவங்கள் 60 பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்கள் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.

16 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் நிகழ்நிலை பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான தேவையை வலியுறுத்துகிறது.

இதேவேளை, மொத்தம் 6,123 சமூக ஊடக கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன, இது தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு குறித்த தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.

அத்துடன், 673 தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான செயல்கள் பதிவாகியுள்ளன, இது அனைவருக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தின் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்