உள்ளூர் முக்கிய செய்திகள்

293 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்

இலங்கையில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச காவல்துறையினர் (இன்டர்போல்) இதுவரை சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பாதாள உலக நடவடிக்கைகள் நாட்டில் முற்றாக ஒழிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 199 சிவப்பு அறிவிப்புகள், 90 நீல அறிவிப்புகள் மற்றும் 4 மஞ்சள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கு காவல்துறையினருக்குச் சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது.

அண்மைய நாட்களில் வெளிநாட்டில் இருந்த 19 குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த செயல்முறை தீவிரமடைவதால், குற்றவாளிகள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் என்று காவல்துறைடினர் கருதுகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்