உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிமன்ற கொலைக்கு உதவிய இஷாரா செவ்வந்தி இந்தியா சென்றுள்ளார்- பொலிஸ்

புதுக்கடை நீதிமன்றத்தில் ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டிருந்த்தாகவும் கூறியுள்ளனர்.

எனினும், இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, செவ்வந்தியைப் பற்றிய அனைத்து தகவல்களும் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் வசிக்கும் தேடப்படும் குற்றவாளிகளைக் கைதுசெய்து நாடு கடத்துவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதுபோன்ற நபர்களை இதற்கு முன்பும் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாகவும் காவல்துறையினர் தெவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இஷாரா செவ்வந்தி தற்போது இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளாரா? என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்