உள்ளூர் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனை கைது செய்ய முடியாத கையாளகாதவர்களே பொலிஸார்- சாகல ரத்நாயக்க

தேசபந்து தென்னகோனின் நியமனம் எனது அழுத்தம் காரணமாக காலம் தாழ்த்தப்படுவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது.

ஆனால் நான் அவரை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
இவை அனைத்தும் கற்பனை கதைகளாகுமென முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு பிளவர் வீதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வேட்புமனு தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.
எனினும் கொழும்பு மாநகரசபையில் பொது வேட்பாளரொருவரை களமிறக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றங்களையும் அடிப்படையாகக் கொண்டே எவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

அதற்கமைய கொழும்பு மாநகரசபை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பொது சின்னமொன்றில் சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரு வேட்பாளரை முன்னிலைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

அந்த சின்னம் யானையா அல்லது வேறு ஏதேனுமா என்பது எதிர்வரும் சில தினங்களுக்குள் தீர்மானிக்கப்படும்.
அரசியலில் மிகவும் தீர்க்கமாக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இதற்கு முன்னரும் பி.பி.ஜயசுதந்தர மற்றும் காமினி செனவிரத்ன போன்றோர் மறைந்திருப்பதாகக் கூறப்பட்டது.
தற்போது தேசபந்து தென்னகோன் மறைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது அழுத்தம் காரணமாகவே தேசபந்து தென்னகோனின் நியமனம் காலம் தாழ்த்தப்படுவதாகக் கூறினர்.

ஆனால் தற்போது நான் அவரை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனைகளால் கூறப்படும் கதைகளாகும்.

நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபரை கண்டு பிடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றதென்றால் இதுவே இன்றைய நிலைவரமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்